Wednesday, March 2, 2011

எனக்காக ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம்...

அமைதி உறங்கிப்போன நகரம்

ஆரவாரம் மட்டுமே விழித்திருக்கும் நரகம்

வாழ்கையோ எந்திரமானது

பணம் மட்டும் உதிரமானது

நிற்கவும் நேரமில்லை

பார்க்கவும் நேரமில்லை

மனிதர்களை கூட

ஏன் இந்த ஓட்டம்?

ஏனோ இத்தனை வாட்டம்?

ஓடும் கூவத்தை விட

நம்மவர் சிந்தும் வியர்வை அதிகம்

பேருந்துகள் நடைபிணம் சுமக்கும்
வாகனமானது?

வாகனங்கலோ எமனாய் போனது

ஓ மனிதர்களே கடற்கரைக்கு

மட்டும் ஏன் ஆறுநாள் விடுமுறை

மரங்களை வெட்டிவிட்டு

மழைக்காக காத்திருப்பவர்களை
என்னவென்று சொல்வது,

மனங்களை விட்டுவிட்ட
பிணங்கலா நாம்?,

ஏன் இப்படி?
எங்கே ஓடுகிறோம்?

எத்தன் பின்னல் ஓடுகிறோம்?
எதற்காக ஓடுகிறோம்?

எத்தனை நாள் ஓடுகிறோம்?

ஒரு நிமிடம்,
ஒரே ஒரு நிமிடம்
யோசித்துபாருங்கள்

வழக்கை சுகமாகும்,
அமைதி வரமாகும்,
இன்பம் வசமாகும்,

எனக்காக ஒரு நிமிடம்
ஒரே ஒரு நிமிடம்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய