எனக்குப் பின்னல் இருந்து கொண்டு
உன்னுள் நான் என்கிறாய்
விலகும் போதுதான் தெரிகிறது
உன்னால்தான் நான் என்று
உன்னுடன் இருக்கும் பொழுதான்
நான் ஒளிர்வதாய் உணர்கிறேன்
என்னை விட்டு நீ விலகினால்
சிறிது சிறுதாய் சிதறுகிறேன்
உன்னோடு நான் உறவாட
விண்ணோடு கண்களை
நம்மோடு உலவவிட்டால்
அந்தோ பரிதாபம்
அவர்களின் பார்வை தான்
Saturday, October 2, 2010
Friday, October 1, 2010
உயிரம்புகள்...
ஒவ்வொரு முறையும் தாக்கப்படுகிறேன்
மிகமிகச் சரியாக மிகத்துல்லியமாக
தாக்கப்படும் ஒவ்வொருமுறையும்
வீழ்ச்சி காண்கிறேன் ரம்மியமாக
தாக்கிய அம்புகுவியல் மேல் நின்று
எண்ண முயல்கிறேன் அம்புகளை அல்ல
வீழ்ச்சிகளை மட்டும் தான்
சில அம்புகள் நீளமானவை
சில அம்புகள் அகலமானவை
சில கூரானவை, பல நேரானவை
மழுங்கியது சில, ஒடிந்தது சில
குருதிக்கரையுடன் சில அம்புகள்
பலரை தாக்கிய அடையாளம் தாங்கி
இவையணைத்தும் என்னைத் தாக்கிய
உயிரம்புகள்...............
மிகமிகச் சரியாக மிகத்துல்லியமாக
தாக்கப்படும் ஒவ்வொருமுறையும்
வீழ்ச்சி காண்கிறேன் ரம்மியமாக
தாக்கிய அம்புகுவியல் மேல் நின்று
எண்ண முயல்கிறேன் அம்புகளை அல்ல
வீழ்ச்சிகளை மட்டும் தான்
சில அம்புகள் நீளமானவை
சில அம்புகள் அகலமானவை
சில கூரானவை, பல நேரானவை
மழுங்கியது சில, ஒடிந்தது சில
குருதிக்கரையுடன் சில அம்புகள்
பலரை தாக்கிய அடையாளம் தாங்கி
இவையணைத்தும் என்னைத் தாக்கிய
உயிரம்புகள்...............
Labels:
(க)விதை
Subscribe to:
Posts (Atom)