Tuesday, January 3, 2012

இந்திய மொழிகளில் தமிழே முதன்மை

  தமிழ்
இந்தியாவின் பழங்கால நாகரீகம் சிந்துசமவெளி நாகரீகம். இதன் வயது சுமார் கிமு.2500 மேல் இருக்கும் என்பது ஆராய்ச்சி வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

 இது உலகின் தொன்மையான பல நாகரீகங்களுக்கு இணையானதாகவும், சிறப்பானதாகவும் இருந்திருக்கிறது என்பதில் சிறுதும் ஐயமில்லை. இங்கு கிடைக்கபெற்ற முத்திரைகளும் படிப்பதற்கு மிகக் கடினமாகவும், முத்திரை வடிவ மொழியாகவும் இருக்கிறது.


                                                                      
 இது தமிழ் பிராமி எழுத்துக்களே என்றும் இதுவரை உள்ள ஆராய்ச்சி கூறுகள் அதற்க்கு அத்தாட்சியாவும் இருப்பதை ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் கூறுகிறார்.



 ஐராவதம் மகாதேவன் அவர்கள் திருச்சியில் பிறந்து, செய்தித்தாள் ஆசிரியராக பணிபுரிந்து, ஆராய்ச்சியாளராக சிறப்புபெற்று பத்மஸ்ரீ விருது வாங்கியவர். இவரின் ஆராய்ச்சி கூற்று படி சிந்து சமவெளி நாகரீகத்தின் பயன்பாட்டு மொழியில் இருக்கும் குறியீடுக
ள் வலமிருந்து இடமாக எழுதப்பட்ட தமிழ் பிராமி வட்டெழுத்துக்களே என்றும், அதுவே திராவிட மொழிகளில் முதன்மையானது என்றும் குறிப்பிடுகிறார்.

இது சம்ஸ்கிருத வடிவம் கொண்டது என்னும் இன்னொரு கூற்று இருந்தாலும், அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை, சமஸ்கிருதம் ஆரியர்களால் கொணரப்பட்டது,
 ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்தது கிமு 1500 தான், அதனால் கிமு 2500 சிந்துசமவெளி நாகரீகத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் எவ்வித தொடர்பும் இருக்க முடியாது என்பதற்கு தொல்லியல் சான்றுகள் பல உள்ளன.



 ஆரியர்களின் வாழ்க்கை முறை குறிக்கும் நூலான ரிக்வேதம் கிராமப்புற வாழ்வை குறிப்பதாய் மட்டுமே உள்ளது, ஆனால் சிந்துசமவெளி நாகரீகம் நகரவாழ்க்கை பண்பாட்டை அடிப்படையாக கொண்டது எனவும், ரிக்வேதே அடிப்படியில் சிந்துசமவெளி நாகரீகத்திற்கும், ஆர்யா கலாச்சாரத்திர்க்கும் சம்ஸ்கிருத மொழிக்கும் உள்ள தொலைவு மிக அதிகமாக காணப்படுகிறது.

 அதிலும் முக்கியமாக ஆரிய கலாச்சாரத்தின் சிறப்பாக இருந்த குதிரை, சிந்துசமவெளியில் எங்குமே இடம்பெறவில்லை இந்தியாவில் குரிரை பற்றிய தெரிவு கிமு 1500 க்கு பிறகே வந்திருக்க வேண்டும், ஆதலால் இதுவரை சிந்துசமவெளியில் பயன்படுத்தப்பட்ட மொழி தமிழ் பிராமி வட்டெழுத்து மொழியே என்பதில் சிறிதும் ஐயமில்லை என்பது ஐராவதம் மகாதேவன் போன்ற ஆராய்ச்சியாளர்களின் நிருபிக்கப்பட்ட கூற்றாக இருக்கிறது.




 இதே போல் உலகின் மிச்சிறந்த பழமையும் பெருமையும் வாய்ந்த எகிப்த்து நாகரீகத்தின் அடையாளமாக கண்டெடுக்கப்பட்ட பானை ஒன்றில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்ப பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டிலும் தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கொண்ட பானை ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.


டிஸ்கி - இவ்வாறான இந்தியாவின் முன்னோடி மொழி தமிழ்மொழி என்றால் போதிதர்மர் மட்டும் எப்படி தமிழனாக இல்லாமல் போனார் என்பது எனக்கு புரியவில்லை.


நன்றி - கிமு கிபி (மதன்), google, விக்கிபீடியா, varalaaru.com 

Monday, January 2, 2012

இந்த இனம் எம் தமிழினம்...


காலப் பெருவெளியில்
பாதச்சுவடுகளை மட்டும் விட்டுச்சென்ற
இனங்களின் மத்தியில்
காலூன்றி நின்று போராடும்
என் தமிழினம்

கயவர்கள் பலரால்
காட்டிக் கொடுக்கப்பட்டபின்னும்
கண்டவர்கள் ஆண்டுவிட்டு
சுரண்டி எடுத்த  பின்னும்
சுயமாய் வாழத் துடிக்கும்
இனம் என் தமிழினம்

சதிகளின் மூலம் அழித்தெடுத்தது போக
நரிகளின் வேளையில் துடைத்தெடுத்தது போக
மீதம் இருக்கும் தன்மானம் தளராமல்
தழைக்க வழிதேடும் இனம் என் தமிழினமே

நாகரீகம் சொல்லிக்கொடுத்த எமக்கு
மோகம் பல பிறந்தாலும்
தமிழ் தாகம் தணியாமல்
தரணியில் இருக்கும் இந்த இனம்
என் தமிழினமே
      
உயிரை விட மானம் பெரிது
என்று மறம் கொண்டு வாழ்ந்த இனம்
மரபு கொஞ்சம் மாறியிருந்தாலும்
இன்னும் மறிக்கவில்லை இனம்
எம் தமிழினம்

ஒற்றுமைக்கு வழியில்லாமல் போக
வேற்றுமை தலைவிரித்தாட
சாதியம், மதம் என்னும்
அடிமை வாழ்வை தகர்த்து
தன் நிலைமையில் மீட்சி காண்கிறது
இந்த இனம் எம் தமிழினம்

மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்
என்னும் குரல் ஒலிக்கிறது ஓயாமல்
கணவாய் இருக்கும் அந்தக் குரல் இப்பொழுது
நிஜமாய் மாறுகிறது, மாற்றுகிறது

இந்த இனம் எம் தமிழினம்

காலச் சுழற்ச்சியில் நாம் மேலேறும் தருணம் இது
என்று தனைத்தானே உணர்ந்து
உயர்த்திக் கொள்கிறது இந்த இனம்
எம் தமிழினம் 

Sunday, January 1, 2012

என்று மெய்படும் அவன் கனவு?


கனவுகள் மெய்பட வேண்டும் என்றான் கவி

மெய்பட்டதா கனவு

இல்லை பொய்பட்டாத?

தினம் தினம் எத்தனை கனவு

அத்தனையும் பொய்யாய் போகுது!
என் தேசமே!!

நான் என்ன செய்வேன் ஏதுசெய்வேன்

வெந்தேன் எனை நானே நொந்தேன்

கனவு என்பது இடற்று பிழையால்

களவு என்பது ஆனது ஏனோ?
ஒழுக்கம் என்பது என் தேசத்தை விட்டு
போனது தானோ? ஏனோ?

மதவெறி இனவெறி பெருகியதிங்கே

மனு நெறிதான் போனது எங்கே?

காசை காணத் தெறியுது இங்கே

பாசம் நேசம் போனது எங்கே?

எதரி வந்தால் ஒற்றுமை காணுது

இல்லை என்றால் வேற்றுமை பேணுது

மாநிலம் முழுதும் சாதியில் வேற்றுமை

தேசம் முழுதும் இதில்தான் ஒற்றுமை

வேற்றுமை என்பது வார்த்தையில் இல்லை

ஒற்றுமை என்பது உள்ளத்தில்(உண்மையில்)இல்லை

எங்கோ போகுது தேசம்

இட்டுகட்டி போடுது பல வேசம்

தண்ணீர் கொடுக்க தரம்கெட்டு கிடக்குது

தாய்க்காவிரி அங்கே சிறைப்பட்டு கிடக்குது

உண்மயில் சொன்னால் வெட்க்கக்கேடு

என்று மறையும் இந்த சாபக்கேடு

விடிவு ஒருநாள் வருமா? என்றேன்

கனவுகள் மெய்பட வேண்டும்
என்றான் கவி

Friday, December 30, 2011

வலைதளங்களில் சிங்கள நரி(நாய்)களின் கைக்கூலிகள்


 சில நாட்களுக்கு முன் தமிழ்
நாட்டு எழுத்தாளர்களும் கலையுலக கலைங்கர்களும் ஈழத்தை வியாபார நோக்குடன் அணுகுவதை கண்டித்து ஈழ உறவு (பதிவர்) பலர் வலியுடன் பதிவிட்டனர். அதற்காக மன்னிப்பு கோரியும் வியாபார நோக்குடயவரை தவிர்த்து உண்மை உணர்வாளர்களும் அதில் அலட்சியப் படுத்துத்த பட்டுவிடக் கூடாதே என்னும் நோக்கில் நான் எனதருமை ஈழத்து உறவுகளேயென்று ஒரு பதிவிட்டேன்,

அதில் தவறு செய்தவர்களுக்காக நான் மன்னிப்பு கோரியும், அதே வேலையில் உண்மை உணர்வாளர்களை காயப்படுத்தி விட வேண்டாம்யென்று கேட்டிருன்தேன், ஆனால் அதே பதிவிற்கு சில புல்லுருவிகள் என்னை வெறுப்பேற்றி, என் எண்ணத்தினை பிறழ்வு செய்வதாய் நினைத்து பின்னூட்டம் போட்டனர் அனானிமஸ் பெயரில்.




 என்னே அவர்கள் வீரம், யார் இவர்கள்? ஈழம் பற்றி பேசினால் இவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது? நம்மை நோக்கி பின்னப்பட்ட சதிவலை இன்னும் இருக்கிறது யென்று சொன்னால் இவர்கள் ஏன் ஆதங்கப் படுகிறார்கள்? நான் புலிகளை மட்டும் ஆதரித்தோ, அல்லது போர் ஒன்றுதான் மீண்டும் வழி என்றோ பதிவிட்டிருந்தால் கூட இவற்றை பிடிக்காத யாராவது சிலர் எதிர்க்க காரணம் உண்டு, அப்படியே எதிர்த்தாலும் கூட அனாநிமசாய் வந்து வீரம் காட்டவேண்டிய அவசியம் இல்லை. அப்டி பட்ட இந்த மாவீரர்கள் ஏன் கோபப் படுகிறார்கள்?

 அப்டிஎன்றால் இவர்கள் யார்? தமிழ் ஈழ கட்டமைப்பை பற்றியோ அல்லது தமிழர் ஒற்றுமையை பற்றியோ இவை இல்லாமல் ஒருமைபாட்டை வெளிக்காட்டும் வகையான பொதுவான, தமிழர் அல்லது ஈழத்தமிழர் என்று சொன்னாலோ இவர்களுக்கு இவ்வளவு கோபம் வரவேண்டிய அடிப்படைக் காரணம் என்ன?




 இவர்கள் இடும் பின்னூட்டம் எல்லாம் பிரிவினையை தோற்றுவிக்க வேண்டும் என்ற நோக்கிலோ அல்லது இணைய ஊடகத்தில் தமிழ் ஈழ கட்டமைப்பை, ஈழமக்களின் நம்பிக்கையின் ஒற்றுமையை குலைக்கும் நோக்கிலோ இருப்பதாய் தோன்றுகிறது.

 இதுபோன்ற கயவர்களின் கைகரியமே நமக்கெதிராய் பின்னப்பட்ட சதி வலை கண்ணுக்குத் தெரியாத இழையினூடாய் இருப்பது புலப்படுகிறதே. இவர்கள்தான் அந்த சதிவலையின் சிலந்திக் குட்டிகள். அதில் சிக்குபவரை சின்னாபின்னப் படுத்துவதும், வலை எங்கேனும் பலமிழந்தால் அதை பலப் படுத்துவதுமே இந்த குட்டி சிலந்திகளின் தலையாய வேலை.


 இதற்கான தலைமை கைக்கூலியாய் இருக்கும் தின்று கொழுத்த விசசிலந்திகள் இலங்கையிலோ, மேற்கத்திய நாடுகளிலோ ஏன் தமிழ்நாட்டிலோ கூட இருக்கலாம், அனால் எங்கு இருந்துகொண்டு என்ன சதி செயல்கள் செய்தாலும் அநியாயம் என்றுமே வென்றதில்லை.

 தமிழனின் நம்பிக்கையே நீதியும், நியாயமும் என்றைக்கும் சாவதில்லை என்பதுதான். அப்படி பட்ட நீதியும் நியாயமும் அவனுக்கு கிடைக்காமல் போய்விடுமா என்ன? உங்களால் முடிந்தவரை எவ்வளவு வஞ்சகமும் நரித்தனமும் செய்ய முடியுமோ செய்துபாருங்கள். ஆனால் ஒன்றுமட்டும் சொல்லிவிடுகிறேன் காலம் இப்படி போகாது, நிச்சயம் மாறும் விடிவு ஓர்நாள் வந்தே தீரும். அன்று இந்த சிலந்திகள் இருக்கும் இடம், தடம் தெரியாமல் போகும்.                                            

 

Thursday, December 29, 2011

கண்ணீரை விலைக்கொடு...


ஆசைகளால் அடுக்கப்பட்ட
வாழ்க்கையிது

முறிக்கப்படும் பொழுதோ!

பறிக்கப்படும் பொழுதோ!
துன்பம் தலைவிரித்தாடும்
துக்கம் தொண்டையடைக்கும்

கனவுகள் கசக்கப்பட்டு

காகிதமாய் குப்பையில்
வீசப்படும்

துயரம் உன்னைத் துரத்தும்

எதுவுமே! எவருமே வேண்டாம்
என்ற எண்ணம் ஊற்றெடுக்கும்

மெய்ஞானம் மெல்ல விடைகொடுப்பதுபோல்

நன்கு நடிக்கும்
சித்தாந்தம் சில நேரம்
தலைகாட்டிச் சிரித்துவிட்டு
சிதறிவிடும்

நமக்காக ஒருவருமில்லை

என்கிற எண்ணம் எழுந்து
மேலே நிற்கும்

அறுபட்ட காத்தாடியாய்

மனம் அலைக்கழிக்கும்
ஆழிப்பேரலையாய்
அத்திரம் ஆர்ப்பரிக்கும்

துள்ளியெழுந்து மேலும்

துயரப்பட்டுவிடாதே

கண்ணீரில் கண்களைக்

கழுவிவிடு சிவந்து போகட்டும்
நாவு வறண்டு போகட்டும்

கண்ணீரை விலைக்கொடுத்து

அமைதியை வாங்கு

ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும்

ஆயிரம் ஆயிரம் நம்பிக்கையை
உருவாக்கும்...