சில்லென்று
தெறித்துவிழும்
மழைத்துளிகளில்
சடுதியில் இறங்கி
ஊன் கரைந்து
உருவழிந்து
மண்ணோடு மண்ணாக
கரைந்தோடி
செடியாகி
மரமாகி
பூவாகி
வாசம் தந்து
வாடி வதங்கி
மீண்டும்
மண்ணோடு
விழுந்து மக்கி
தூசாகி
துரும்பாகி
காற்றோடு
கலந்து பறந்து
நீர்மங்களில்
படிந்து
கனலோடு
எரிந்து
ஆவியாய் படர்ந்து
குளிரோடு உறைந்து
மேகமாய் மாறி
விண்ணோடு ஓடி
மலையோடு மோதி
மழையாக வேண்டும்
மீண்டும் மனிதனாய் மட்டும்
மாறிவிடாமல்.....
Wednesday, March 2, 2011
என்னதான் செய்யும் மலர்பஞ்சு...
அழகிய பாலகன்னவன்
பால்முகம்தான் மாறாதவன்
கண்களில் ஏனோ கண்ணீர்த்துளி
முகத்திலோ பயத்தின் வலி
ஏனோ அவனுள் ஏக்கம்
பயத்தினால் வந்த தாக்கம்
பலவந்தம்தான் படுத்தப்பட்டான்
பலம்கொண்டுதான் அழுத்தப்பட்டான்
வலியவரால் ஒடுக்கப்பட்டான்
இருப்புக்கரங்களால் அடக்கப்பட்டான்
என்னதான் செய்யும் மலர்பஞ்சு
பலமில்ல கரமோ வெறும்பிஞ்சு
சிறுக சிறுகதான் அறுக்கப்பட
இழக்க இழக்கதான் இறுக்கம் விட
உதடுகள்தான் சுருங்கியது
கண்களும்தான் அடங்கியது
அழுகையும் மறையத்தொடங்கியது
தேம்பலோ நிறையத்தொடங்கியது
அந்த முடித்திருத்தகமே மூழ்கியது சோகத்தில்
பால்முகம்தான் மாறாதவன்
கண்களில் ஏனோ கண்ணீர்த்துளி
முகத்திலோ பயத்தின் வலி
ஏனோ அவனுள் ஏக்கம்
பயத்தினால் வந்த தாக்கம்
பலவந்தம்தான் படுத்தப்பட்டான்
பலம்கொண்டுதான் அழுத்தப்பட்டான்
வலியவரால் ஒடுக்கப்பட்டான்
இருப்புக்கரங்களால் அடக்கப்பட்டான்
என்னதான் செய்யும் மலர்பஞ்சு
பலமில்ல கரமோ வெறும்பிஞ்சு
சிறுக சிறுகதான் அறுக்கப்பட
இழக்க இழக்கதான் இறுக்கம் விட
உதடுகள்தான் சுருங்கியது
கண்களும்தான் அடங்கியது
அழுகையும் மறையத்தொடங்கியது
தேம்பலோ நிறையத்தொடங்கியது
அந்த முடித்திருத்தகமே மூழ்கியது சோகத்தில்
Labels:
(க)விதை
எனை ஈர்க்கும் மழையே!!!
சில்லென காற்று சிலிர்க்க
மெல்லென மேகம் துளிர்க்க
வில்லென வானம் விரிக்க
அம்பென மழைதான் தெறிக்க
முதல்துளி முகத்தில் விழ
பலதுளி நிலத்தில் விழ
எழும்பியது மண் வசம்
நிரம்பியது என் சுவாசம்
வாடை காற்று வீசும்
இயற்கை என்னோடு பேசும்
மெல்ல துளிகளை பெருக்கும்
அதுவந்து என்னை கரைக்கும்
மனதில் மகிழ்ச்சியை நிறைக்கும்
பூக்களும் என்னோடு தளிர்க்கும்
மதியின் நிலையோ இறக்கும்
மனமோ காற்றில் பறக்கும்
திசையோ முற்றும் திறக்கும்
இசையோ செவியை நிறைக்கும்
பறவைகள் விண்ணில் பறக்கும்
உடல்மட்டும் என்னில் இருக்கும்
என்மேல் துளிகள் கோர்க்கும்
என்னை தழுவி தீர்க்கும்
விண்மேல் கொண்டு சேர்க்கும்
தவிப்பில் எனை ஈர்க்கும் மழையே!!!!!!!!!!!!
மெல்லென மேகம் துளிர்க்க
வில்லென வானம் விரிக்க
அம்பென மழைதான் தெறிக்க
முதல்துளி முகத்தில் விழ
பலதுளி நிலத்தில் விழ
எழும்பியது மண் வசம்
நிரம்பியது என் சுவாசம்
வாடை காற்று வீசும்
இயற்கை என்னோடு பேசும்
மெல்ல துளிகளை பெருக்கும்
அதுவந்து என்னை கரைக்கும்
மனதில் மகிழ்ச்சியை நிறைக்கும்
பூக்களும் என்னோடு தளிர்க்கும்
மதியின் நிலையோ இறக்கும்
மனமோ காற்றில் பறக்கும்
திசையோ முற்றும் திறக்கும்
இசையோ செவியை நிறைக்கும்
பறவைகள் விண்ணில் பறக்கும்
உடல்மட்டும் என்னில் இருக்கும்
என்மேல் துளிகள் கோர்க்கும்
என்னை தழுவி தீர்க்கும்
விண்மேல் கொண்டு சேர்க்கும்
தவிப்பில் எனை ஈர்க்கும் மழையே!!!!!!!!!!!!
Labels:
(க)விதை
என்னோட நெனப்பெல்லாம்...
ஆத்தங்கர ஓரத்துல பொழுதுசாயும் நேரத்துல
உனப்பத்தி பாட்டெழுத ஏட்டேடுத்த வேளையில
வார்த்த ஒன்னும் தோனல வாடும் பயிர் சாகல
உன் நெனப்போட போழுதுசாஞ்சு போச்சு
ராவெல்லாம் தூக்கம்போயி போழுதுவிடிஞ்சு போச்சு
கரம்பையில குயல்கூட காத்திருக்குது
ஆடும் மயில்தான்னு உனநெனச்சு பாத்திருக்குது
தரிசுநெலம் போலதான் நான் கெடன்தேன்
விரிசலெல்லாம் மறந்சுபோவும்னு நீ இருந்த
ஊதக்காத்து அடிக்குது ஒடம்புக்குள்ள தொலைக்குது
உன்ன நெனச்சுகிட்டா குளிருங்கொஞ்சம் அடங்குது
கருக்கலிலே காத்திருந்தேன் கம்மாகர ஓரமா
உன்ன பாக்கத்தானே நீ வரும் நேரமா
சோளக்கருது இன்கேயே பூத்திருக்குது
மஞ்சப்பூசி வரும் உன்னபாக்க காத்திருக்குது
ஆத்தா அடிச்சுகூட நான் அழுததில்ல
நீ எனபாத்து சிரிக்கலன்னு அழுதுபுட்டேன்
பச்சநெல்லெல்லாம் நாத்தா இங்கே நட்டாச்சு
என்னோட நெனப்பெல்லாம் உன்காலில் போட்டாச்சு
உனப்பத்தி பாட்டெழுத ஏட்டேடுத்த வேளையில
வார்த்த ஒன்னும் தோனல வாடும் பயிர் சாகல
உன் நெனப்போட போழுதுசாஞ்சு போச்சு
ராவெல்லாம் தூக்கம்போயி போழுதுவிடிஞ்சு போச்சு
கரம்பையில குயல்கூட காத்திருக்குது
ஆடும் மயில்தான்னு உனநெனச்சு பாத்திருக்குது
தரிசுநெலம் போலதான் நான் கெடன்தேன்
விரிசலெல்லாம் மறந்சுபோவும்னு நீ இருந்த
ஊதக்காத்து அடிக்குது ஒடம்புக்குள்ள தொலைக்குது
உன்ன நெனச்சுகிட்டா குளிருங்கொஞ்சம் அடங்குது
கருக்கலிலே காத்திருந்தேன் கம்மாகர ஓரமா
உன்ன பாக்கத்தானே நீ வரும் நேரமா
சோளக்கருது இன்கேயே பூத்திருக்குது
மஞ்சப்பூசி வரும் உன்னபாக்க காத்திருக்குது
ஆத்தா அடிச்சுகூட நான் அழுததில்ல
நீ எனபாத்து சிரிக்கலன்னு அழுதுபுட்டேன்
பச்சநெல்லெல்லாம் நாத்தா இங்கே நட்டாச்சு
என்னோட நெனப்பெல்லாம் உன்காலில் போட்டாச்சு
Labels:
(க)விதை
சுவாரசியமான சம்பவம்...
நேற்றிரவு ஒரு சுவாரசியமான சம்பவம் நண்பர்களே (அத நாங்க சொல்றோம் நீ கதைய சொல்லு டா),
மாலை 6:00 மணிக்கு அலுவலகம் முடிந்ததும் (வெட்டிமுரிக்குறாரு??) நேராக ரூமுக்கு சென்று குளித்து முடித்துவிட்டு (இத நம்பனுமா?) துணி மாற்றிக்கொண்டு சாப்பிட போனா(அதான),
மணி 6:40 ஆகிடுச்சு. சரின்னு சாப்டு முடிச்சுட்டு திரும்ப அறைக்கு போகலாம்னு திரும்பி போனே. அப்ப நம்ப பசங்க ரெண்டுபேரூ mobil ல பேசிகிட்டு இருந்தாங்க,
சரி அவங்கள தொந்தரவு பண்ண வேணாம்னு கொஞ்ச நடந்துபோய் திரும்பினா அங்க வழிஇல்ல, எப்டி இருக்கும் அதன் என்னோட ரூம் கதவாச்சே அதவும் பூட்டிவேற இருக்குது. சரி கதவ தொரக்கலாம்னு சாவிய தேடுனா பைல சாவிய காணும் ஒருநிமிஷம் பகீர்னு ஆகிடுச்சு,
எப்டியோ மனச தைரியபடுதிக்கிட்டு இனொரு பைல தேடுனா சாவி இருக்கு, அப்டியே கதவ மெல்ல தொரந்து உள்ள போய் மறுபடியும் கதவ சத்தமில்லாம பூட்டிட்டு லைட் ஆப் பண்ணிட்டு
அப்புறம் என்ன படுத்து தூங்கிட்டேன். போ போ போய் வேலைய பாருங்கப்பா!!!!!!!!!!!!!!! வெட்டி கத பேசிகிட்டு
மாலை 6:00 மணிக்கு அலுவலகம் முடிந்ததும் (வெட்டிமுரிக்குறாரு??) நேராக ரூமுக்கு சென்று குளித்து முடித்துவிட்டு (இத நம்பனுமா?) துணி மாற்றிக்கொண்டு சாப்பிட போனா(அதான),
மணி 6:40 ஆகிடுச்சு. சரின்னு சாப்டு முடிச்சுட்டு திரும்ப அறைக்கு போகலாம்னு திரும்பி போனே. அப்ப நம்ப பசங்க ரெண்டுபேரூ mobil ல பேசிகிட்டு இருந்தாங்க,
சரி அவங்கள தொந்தரவு பண்ண வேணாம்னு கொஞ்ச நடந்துபோய் திரும்பினா அங்க வழிஇல்ல, எப்டி இருக்கும் அதன் என்னோட ரூம் கதவாச்சே அதவும் பூட்டிவேற இருக்குது. சரி கதவ தொரக்கலாம்னு சாவிய தேடுனா பைல சாவிய காணும் ஒருநிமிஷம் பகீர்னு ஆகிடுச்சு,
எப்டியோ மனச தைரியபடுதிக்கிட்டு இனொரு பைல தேடுனா சாவி இருக்கு, அப்டியே கதவ மெல்ல தொரந்து உள்ள போய் மறுபடியும் கதவ சத்தமில்லாம பூட்டிட்டு லைட் ஆப் பண்ணிட்டு
அப்புறம் என்ன படுத்து தூங்கிட்டேன். போ போ போய் வேலைய பாருங்கப்பா!!!!!!!!!!!!!!! வெட்டி கத பேசிகிட்டு
Labels:
லொள்ளு
Subscribe to:
Posts (Atom)