நாட்டுக்காக நல்லது செய்யவும் உண்மையை எடுத்துக் கூறவுமே இந்த பத்திரிகை, ஆனால் பத்திரிகை தர்மம், நீதி, நியாயம் என்று வரைமுறையும் இல்லாமல் ஒரு பத்திரிகை இருக்கிறது புளுகுமூட்டை பத்திரிகை என்றால் அது இந்த தின(மலம்)மலர் தான்.
யார் இந்த ஜெயின்? இந்திய அணுமின் கழகத் தலைவர்தானே, அவர் ஒன்றும் உளவுத்துறை தலைவரோ, உள்துறை மந்திரியோ அல்லவே? அவர் சொல்லிவிட்டாராம் கூடங்குள பிரச்சனையில் வெளிநாட்டின் உதவி இருக்கிறது என்று, அது உண்மையா இல்லை பொய்யா என்றுகூட பாராமல் தலையங்கமாய் சதி? என்று பதித்திர்க்கும் இந்த தின(மலம்)மலரைப் பற்றி சொன்னால் மட்டும் வக்காலத்து வாங்க வந்துவிடும் இரு கூட்டம்
ஒன்று பார்ப்பன கும்பல், இன்னொன்று சுயநலம் பிடித்து சொந்த நாட்டு மக்களையே பணயம் வைக்கும் கும்பல்
அணுமின் கழக தலைவரே சொல்லி இருக்கிறார், "ஹாட் ரன்" எனப்படும் தொழில்நுட்ப பணி முடிந்துவிட்டால், குளிரூட்டும் பணி தொடர்ந்து நடக்க வேண்டும் இல்லை என்றால் அதில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்ப்படும் என்று, சாதாரண அடிப்படை பணிகள் பாதிக்கப் பட்டாலே இவ்வளவு ஆபத்து என்றால் சுனாமி போன்ற இயற்க்கை சீற்ற காலங்களில் இந்த பணிகள் பாதிக்கபடதா என்ன? இன்னும் எவ்வளவு பாதிப்புகள் வரக்கூடும்?
அணுமின் கழக தலைவர் என்றால் அதற்கு என்ன பாதுகாப்பு தருகிறோம், உத்திரவாதம் தருகிறோம் என்றுதான் சொல்லவேண்டுமே தவிர, மக்கள் போராட்டத்தில் வெளிநாடுகளின் தொடர்பு இருக்க இல்லை என்பதெல்லாம் உளவுத்துறைதான் சொல்லவேண்டும், இல்லை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள் இந்த திரிப்பு வேலைகளை எல்லாம் உங்களுக்கு வேண்டாம்.
அதுபோல் அங்கு அமைதியாக போராட்டம்
நடைபெற்றுக் கொண்டிருக்க, வீண் புரட்டு செய்தியாகவும், புளுகு மூட்டையகவும் இருக்கும் தமிழின துரோகி பார்ப்பன பத்திரிகை தின(மலம்)மலர் அங்கு பெரிய அளவில் சாலை மறியல்கள் நடக்கிறது என்றும், அதனால் மத்திய படையும், கடற்படையும் அங்கு தீவிர கண்காணிப்பில் இருக்கிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது,
இதுநாள் வரையில் தமிழர் மீனவர் பிரச்சனையில் எவ்வளவு போராட்டம் நடத்தி இருப்போம் எதாவது ஒன்றுக்காவது இந்த தினமலர் இப்படி செய்தி வெளியிட்டது உண்டா? மத்திய அரசு இந்த அளவிற்கு கவனத்தில் கொண்டதுண்டா?
தமிழ் நாட்டு மக்களின் உயிரைப் பணயம் வைத்து உங்களுக்கு மின்சாரம் வேண்டும், ஆனால் எங்களது கோரிக்கையை, வேண்டுகோளை நீங்கள் காதில் வாங்கிக்கொள்ள மாட்டீர்கள்? எங்களை யார் அசிங்கப் படுத்தி பேசினாலும் கண்டனம் தெரிவிக்க மாட்டீர்கள்? உங்கள் அரசியல் உள்நோக்கத்துக்காக எங்கள் இனத்தை பலியிடுவீர்கள்? எங்கள் மாநிலத்திற்கு நன்மை செய்வதென்றால் உங்களுக்கு கசப்பாய் தோன்றும் ?
இப்படி பலகேள்விகள் கேட்கலாம், எவ்வளவு கேள்வி கேட்டாலும் இந்த பார்ப்பானும், பார்ப்பன பத்திரிக்கையும் அதற்க்கு வக்காலத்து வாங்குபவர்களும் திருந்தப் போவதில்லை.
அதுசரி வீட்டில் மின்னசாரம் இல்லை என்று நமது மக்களின் உயிரை பணயம் வைப்பது தவறில்லை என்று தமிழனே சுயநலமாய் சிந்திக்கும்போது, இந்த தின(மலம்)மலர் தமிழ் போராட்டம் வெற்றி பெற்று விடக் கூடாது என்னும் பார்ப்பன புத்தியில்தானே செய்கிறது, அவர்களுக்கும் இந்த தின(மலம்)மலருக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.
Saturday, October 29, 2011
தமிழ் மொழிபோல் சிறப்பாய் எங்கும் காணோம்
உலகில் இன்று பெரும் பிரச்சனை மதம், இந்த மதம் சில இடங்களில் நன்மை விளைவித்தாலும் பல இடங்களில் தீமையையே விதைக்கிறது. கால ஓட்டத்திற்கு தகுந்தார்ப்போல் மதத்தின் ஈடுபடும், பெரும்பான்மையும் மாறிக்கொண்டே இருக்கும் இப்படி பட்ட மதத்திற்கு இருக்கும் மதிப்பு இனத்திற்கு இல்லாமல் போவது ஏன்?
கலாச்சாரம், பண்பாடு, மதம், தெய்வம் என்று அனைத்திற்கும் அடிப்படை இந்த மொழியே, மொழியின் அடிப்படியில் இருக்கும் இன உணர்வின் வெளிப்பாடுதான் நாகரிக வாழ்க்கை, ஆனால் அப்படிப்பட்ட மொழிக்கு, இனத்திற்கு இன்று மரியாதை இருக்கிறதா? என்றால் இல்லை என்றே சொல்லலாம்.
காசு பார்க்க முடியவில்லை என்னும் ஒரே காரணத்திற்காக இன்று மொழிப்பற்றும், அதனை அடிப்படையாக கொண்ட இனப் பற்றும் குறைந்து கொண்டே வருகிறது.
பிற மொழிகளை கற்றுக்கொள்வது என்றுமே தவறில்லை, ஆனால் காசு கிடைக்கிறது என்பதற்காக அவற்றை பெருமையாக நினைப்பது என்பதைப்போல ஒரு கேவலமான செயல் உலகில் இல்லை.
பிற மொழிகளில் குழந்தை புலமை பெற வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்களே தாய் மொழியை தவிர்த்து பிற மொழியை திணிப்பது என்பது தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்காமல் தவிர்ப்பதற்கு சமமாகவே நினைக்கிறேன்.
மொழிகளைப் பொறுத்த வரையில் இல்லாத ஒரு சில வார்த்தைகளை பிற மொழிகளில் இருந்து எடுத்துக்கொள்வது என்பது இயல்பே, உதாரணமாக ஆங்கிலத்தில் லத்தீனும், பிரன்ச்சும், கலந்திருப்பதுபோல் தமிழும் கலந்திருக்கிறது
(கட்டுமரான், வெட்டிவேர்)
http://en.wikipedia.org/wiki/Catamaran
http://en.wikipedia.org/wiki/Chrysopogon_zizanioides
நன்றி விக்கிபீடியா
இல்லாத வார்த்தைகளாய் இருந்தால், பெயர்களாய் இருந்தால் தூய தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தவிட்டாலும், அம்மா என்பதற்கு பதிலாக மம்மி என்று பழக்கப் படுத்துவது இதைவிடக் கொடுமை உலகில் எதுவுமே இல்லை இதுவே தமிழ் மொழி துரோகமே.
தமிழின் சிறப்பே ஒவ்வொரு பொருளின் பெயருக்கும் காரண பொருளைக் கொண்டும், அதன் தன்மையை பொருத்தும் பெயரிட இயலும், ஆனால் இது அனைத்து மொழிகளில் இயலுமா என்பது கேள்விக் குறியே
இப்படி ஒரு தனிச்சிறப்பான மொழியை தவிர்த்து காசு உள்ள நாட்டின் மொழி, அல்லது இந்த மொழியால் அதிக காசு கிடைக்கிறது என்பதற்காக தமிழை இழிவாய் நினைத்து பிற மொழிகளை பெருமையாய் நினைத்து புழங்குவதென்பது எப்படி பட்ட வாழ்க்கை என்பதை நீங்களே தீர் மாநித்துக் கொள்ளுங்கள், இல்லை மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அது சொல்வதை நீங்களே கேட்டுப் பாருங்கள்.
வளர்க தமிழ்
வாழ்க தமிழினம்
கலாச்சாரம், பண்பாடு, மதம், தெய்வம் என்று அனைத்திற்கும் அடிப்படை இந்த மொழியே, மொழியின் அடிப்படியில் இருக்கும் இன உணர்வின் வெளிப்பாடுதான் நாகரிக வாழ்க்கை, ஆனால் அப்படிப்பட்ட மொழிக்கு, இனத்திற்கு இன்று மரியாதை இருக்கிறதா? என்றால் இல்லை என்றே சொல்லலாம்.
காசு பார்க்க முடியவில்லை என்னும் ஒரே காரணத்திற்காக இன்று மொழிப்பற்றும், அதனை அடிப்படையாக கொண்ட இனப் பற்றும் குறைந்து கொண்டே வருகிறது.
பிற மொழிகளை கற்றுக்கொள்வது என்றுமே தவறில்லை, ஆனால் காசு கிடைக்கிறது என்பதற்காக அவற்றை பெருமையாக நினைப்பது என்பதைப்போல ஒரு கேவலமான செயல் உலகில் இல்லை.
பிற மொழிகளில் குழந்தை புலமை பெற வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்களே தாய் மொழியை தவிர்த்து பிற மொழியை திணிப்பது என்பது தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்காமல் தவிர்ப்பதற்கு சமமாகவே நினைக்கிறேன்.
மொழிகளைப் பொறுத்த வரையில் இல்லாத ஒரு சில வார்த்தைகளை பிற மொழிகளில் இருந்து எடுத்துக்கொள்வது என்பது இயல்பே, உதாரணமாக ஆங்கிலத்தில் லத்தீனும், பிரன்ச்சும், கலந்திருப்பதுபோல் தமிழும் கலந்திருக்கிறது
(கட்டுமரான், வெட்டிவேர்)
http://en.wikipedia.org/wiki/Catamaran
http://en.wikipedia.org/wiki/Chrysopogon_zizanioides
நன்றி விக்கிபீடியா
இல்லாத வார்த்தைகளாய் இருந்தால், பெயர்களாய் இருந்தால் தூய தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தவிட்டாலும், அம்மா என்பதற்கு பதிலாக மம்மி என்று பழக்கப் படுத்துவது இதைவிடக் கொடுமை உலகில் எதுவுமே இல்லை இதுவே தமிழ் மொழி துரோகமே.
தமிழின் சிறப்பே ஒவ்வொரு பொருளின் பெயருக்கும் காரண பொருளைக் கொண்டும், அதன் தன்மையை பொருத்தும் பெயரிட இயலும், ஆனால் இது அனைத்து மொழிகளில் இயலுமா என்பது கேள்விக் குறியே
இப்படி ஒரு தனிச்சிறப்பான மொழியை தவிர்த்து காசு உள்ள நாட்டின் மொழி, அல்லது இந்த மொழியால் அதிக காசு கிடைக்கிறது என்பதற்காக தமிழை இழிவாய் நினைத்து பிற மொழிகளை பெருமையாய் நினைத்து புழங்குவதென்பது எப்படி பட்ட வாழ்க்கை என்பதை நீங்களே தீர் மாநித்துக் கொள்ளுங்கள், இல்லை மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அது சொல்வதை நீங்களே கேட்டுப் பாருங்கள்.
வளர்க தமிழ்
வாழ்க தமிழினம்
Labels:
கட்டுரை
Friday, October 28, 2011
பிரபா…
“ஏய்...பிரபா எங்க போய் தொலஞ்ச....முண்டம்?" என்று
கத்திக்கொண்டே வந்தாள் பங்கஜம்மாள். கோபம் தலைக்கேற வார்த்தையில் கொட்டினாள். "பத்திர பண்டம் கழுவல.... எங்க போய் தொலஞ்ச எரும..." என்று வசை பாடினாள்.
"அம்மா?.... ஏம்மா சும்மா கத்துற? நான் தான் பிரபாவ மெடிக்கல் வரைக்கும் போ சொன்னேன்" என்றாள் சுவேதா.
சுவேதா பங்கஜம்மாளின் ஒரே மகள் செல்ல மகள். கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறாள். சுவேதாவுக்கு பிரபா என்றாள் கொள்ளை பிரியம். பிரபா வெகுநாட்களாக அவர்கள் வீட்டில் வேலை செய்வதால் மட்டுமல்லாமல், சுவேதாவின் அப்பா வெளிநாட்டில் இருக்கிறார் வருசத்துக்கு ஒருமுறைதான் வருவர், ஒருமாதம் கூட தங்கமாட்டார், அம்மாவோ மூட்டுவலியால் பாதி நேரம் படுக்கைல்தான், உடன்பிறந்தவர்களும் கிடையாது.
அவள் அதிகநேரம் செலவிடுவது பிரபாவுடன்தான், அதனால் பிரபாவின் மேல் அவளுக்கு ஒரு தனி பிரியம்.
"வீட்டபாரு ஒரே தூசி.... ஒரு வேலைய ஒழுங்க செய்ரதில்லை மாசாமாசம் சம்பலம் மட்டும் முழுசா 900 ரூபா.... தெண்ட செலவு"
என்று பங்கஜம்மாள் கரித்துக் கொட்டும் பொழுதே வேர்க்க விருவிருக்க ஓடி வந்த பிரபாவை பார்த்து
"எவ்வளவு நேரம்? ஆடி அசஞ்சி வர......?" என்றாள்.
"இல்ல பெரியம்மா நம்ப தெரு மெடிக்கல் தொரக்கல, அதன் மெயின் ரோட்டு கடைக்கு போய் மருந்து வாங்கியாந்தேன்..... சின்னமாதான் எங்க இருந்தாலும் வாங்கியார சொன்னாங்க...." என்று பிரபா முடிப்பதற்குள்
"சரி..சரி... விட்டா கதையளப்ப போ போ போய் வேலைய பாரு...." என்றாள்.
பிரபா பதிலேதும் சொல்லாமல் சென்றபின் சுவேதா
"ஏம்மா? பிரபா பாவமில்ல இப்டி எரிஞ்சி எரிஞ்சி விழுற" என்றவளிடம்
"நீ சும்மா இருடி, யார்யார எப்டி வைக்கனும்னு எனக்கு தெரியும். வேலக்காரங்கள இப்டித்தான் வைக்கனும் இல்லனா நம்ப தலைல ஏறி உக்காந்துக்குவாங்க" என்று சொல்லிக்கொண்டே சென்ற பங்கஜம்மாளை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள் சுவேதா.
"என்னதான் இருந்தாலும் எல்லோருக்கும் மனசு என்று ஒன்று இருக்குமே?, வலி அனைவருக்கும் ஒன்று தானே? என்னை ஒத்த வயததுதான் பிரபாவும், பாவம்!!. கொடிது கொடிது வறுமை கொடிது அதனிலும் கொடிது இளமையில் வறுமை, என்பது எவ்வளவு உண்மை"
என்று தனக்குத்தானே வருந்திக் கொண்டாள்.
“என்னடி ரொம்ப பாவப் படுறியோ?" என்று பங்கஜம்மாள் கேட்க
தன் சிந்தனையிலிருந்து திடீர் என்று விடுபட்டவள்
"இல்லமா, நேத்துக்கூட சுடுதண்ணிய கால்ல ஊத்திக்கிகிட்டு காலெல்லாம் ஒரே காயம், பாவம்மா பிரபா." என்றால் ஒரு குழந்தை போல
"சூடான பத்தரத்த எறக்கி வக்கிம்போது துணிய வச்சிதான் ஏறக்கனும், இந்த அறிவுகூட இல்லமா வேல செஞ்சா இப்டிதான் ஆகும்"
என்று புத்தகத்தை பார்த்தபடி கூறியவள், ஒரு ராட்சசி போல் தெரிந்தால் சுவேதாவின் கண்களுக்கு.
இது எதைப் பற்றியும் கவலைபடாமல், காலால் இட்ட பணிகளை தலையால் முடித்துவிட்டு பிரபா கிளம்பும் போது மணி 6.15 ஆகிவிட்டது.
"பெரியம்மா…? நான்…. கெளம்பட்டுமா....?" என்று தயங்கிய பிரபாவின் முகத்தைக்கூட பார்க்காமல்
"இம்.., இம்.., நாளைக்கு காலைல அஞ்சு மணிக்கு வந்துடு" என்றவளிடம் சரி என்று தலையாட்டிவிட்டு வந்த பிரபா வாசலை தாண்டும் பொழுது
"பிரபா ஒருநிமிஷம் நில்லு" என்றாள் சுவேதா
"என்ன சின்னம்மா ஏதாவது வாங்கியாரனுமா?"
"அதெல்லாம் ஒன்னும் வேணாம், இந்தா இத பிடி" என்று ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை பிரபாவின் கையில் திணித்தாள்.
"இல்லமா வேண்டாம், பெரியம்மாவுக்கு தெரிஞ்ச திட்டுவாங்க"
என்று நெளிந்த பிரபாவின் கையை விடாமல் பணத்தை திணித்தபடி
"அதெல்லாம் ஒன்னும் தெரியாது, அப்படி கேட்டாலும் நான் சொல்லிக்கிறேன், நீ காலுக்கு நல்ல மருந்தா வாங்கிப்போடு... " என்றாள்.
சுவேதாவின் பிடிவாதத்தால் பணத்தை வாங்கிக்கொண்ட பிரபா
"சரி நான் கெளம்பறேன் சின்னம்மா" என்று பிரபா நகர முயல
"பிரபா நான் சொன்னத யோசிச்சுப் பாத்தியா?" என்றாள் தலையை குனிந்து கொண்டே.
"சின்னம்மா நான் அன்னைக்கு சொன்னதான் இப்பவும் சொல்றேன், தயவு செஞ்சி புரிஞ்சுக்குங்க. நீங்க பணக்காரங்க நான் ஒரு ஏழ அதுவும் வயசுக்குவந்த தங்கச்சிக்கு ஒரு நல்ல துணி எடுத்துக் குடுக்ககூட வக்கில்லாத ஏழ, உங்களுக்கும் எனக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது. எம்மேல உங்களுக்கு இருக்குறது காதலில்ல கருண, கருணையும் காதலையும் போட்டுக் கொழப்பிக்காதீங்க, அதுவுமில்லாம என்னால உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ண முடியாது. என்ன மன்னிச்சிடுங்க." என்று கையெடுத்து கும்பிட்டபடி திரும்பி நடந்தான் ஏழை பிரபாகரன்.
கலங்கிய கண்களுடன் பிரபாகரனை பார்த்தப்படியே சிலையாய் நின்றாள் சுவேதா.
கத்திக்கொண்டே வந்தாள் பங்கஜம்மாள். கோபம் தலைக்கேற வார்த்தையில் கொட்டினாள். "பத்திர பண்டம் கழுவல.... எங்க போய் தொலஞ்ச எரும..." என்று வசை பாடினாள்.
"அம்மா?.... ஏம்மா சும்மா கத்துற? நான் தான் பிரபாவ மெடிக்கல் வரைக்கும் போ சொன்னேன்" என்றாள் சுவேதா.
சுவேதா பங்கஜம்மாளின் ஒரே மகள் செல்ல மகள். கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறாள். சுவேதாவுக்கு பிரபா என்றாள் கொள்ளை பிரியம். பிரபா வெகுநாட்களாக அவர்கள் வீட்டில் வேலை செய்வதால் மட்டுமல்லாமல், சுவேதாவின் அப்பா வெளிநாட்டில் இருக்கிறார் வருசத்துக்கு ஒருமுறைதான் வருவர், ஒருமாதம் கூட தங்கமாட்டார், அம்மாவோ மூட்டுவலியால் பாதி நேரம் படுக்கைல்தான், உடன்பிறந்தவர்களும் கிடையாது.
அவள் அதிகநேரம் செலவிடுவது பிரபாவுடன்தான், அதனால் பிரபாவின் மேல் அவளுக்கு ஒரு தனி பிரியம்.
"வீட்டபாரு ஒரே தூசி.... ஒரு வேலைய ஒழுங்க செய்ரதில்லை மாசாமாசம் சம்பலம் மட்டும் முழுசா 900 ரூபா.... தெண்ட செலவு"
என்று பங்கஜம்மாள் கரித்துக் கொட்டும் பொழுதே வேர்க்க விருவிருக்க ஓடி வந்த பிரபாவை பார்த்து
"எவ்வளவு நேரம்? ஆடி அசஞ்சி வர......?" என்றாள்.
"இல்ல பெரியம்மா நம்ப தெரு மெடிக்கல் தொரக்கல, அதன் மெயின் ரோட்டு கடைக்கு போய் மருந்து வாங்கியாந்தேன்..... சின்னமாதான் எங்க இருந்தாலும் வாங்கியார சொன்னாங்க...." என்று பிரபா முடிப்பதற்குள்
"சரி..சரி... விட்டா கதையளப்ப போ போ போய் வேலைய பாரு...." என்றாள்.
பிரபா பதிலேதும் சொல்லாமல் சென்றபின் சுவேதா
"ஏம்மா? பிரபா பாவமில்ல இப்டி எரிஞ்சி எரிஞ்சி விழுற" என்றவளிடம்
"நீ சும்மா இருடி, யார்யார எப்டி வைக்கனும்னு எனக்கு தெரியும். வேலக்காரங்கள இப்டித்தான் வைக்கனும் இல்லனா நம்ப தலைல ஏறி உக்காந்துக்குவாங்க" என்று சொல்லிக்கொண்டே சென்ற பங்கஜம்மாளை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள் சுவேதா.
"என்னதான் இருந்தாலும் எல்லோருக்கும் மனசு என்று ஒன்று இருக்குமே?, வலி அனைவருக்கும் ஒன்று தானே? என்னை ஒத்த வயததுதான் பிரபாவும், பாவம்!!. கொடிது கொடிது வறுமை கொடிது அதனிலும் கொடிது இளமையில் வறுமை, என்பது எவ்வளவு உண்மை"
என்று தனக்குத்தானே வருந்திக் கொண்டாள்.
“என்னடி ரொம்ப பாவப் படுறியோ?" என்று பங்கஜம்மாள் கேட்க
தன் சிந்தனையிலிருந்து திடீர் என்று விடுபட்டவள்
"இல்லமா, நேத்துக்கூட சுடுதண்ணிய கால்ல ஊத்திக்கிகிட்டு காலெல்லாம் ஒரே காயம், பாவம்மா பிரபா." என்றால் ஒரு குழந்தை போல
"சூடான பத்தரத்த எறக்கி வக்கிம்போது துணிய வச்சிதான் ஏறக்கனும், இந்த அறிவுகூட இல்லமா வேல செஞ்சா இப்டிதான் ஆகும்"
என்று புத்தகத்தை பார்த்தபடி கூறியவள், ஒரு ராட்சசி போல் தெரிந்தால் சுவேதாவின் கண்களுக்கு.
இது எதைப் பற்றியும் கவலைபடாமல், காலால் இட்ட பணிகளை தலையால் முடித்துவிட்டு பிரபா கிளம்பும் போது மணி 6.15 ஆகிவிட்டது.
"பெரியம்மா…? நான்…. கெளம்பட்டுமா....?" என்று தயங்கிய பிரபாவின் முகத்தைக்கூட பார்க்காமல்
"இம்.., இம்.., நாளைக்கு காலைல அஞ்சு மணிக்கு வந்துடு" என்றவளிடம் சரி என்று தலையாட்டிவிட்டு வந்த பிரபா வாசலை தாண்டும் பொழுது
"பிரபா ஒருநிமிஷம் நில்லு" என்றாள் சுவேதா
"என்ன சின்னம்மா ஏதாவது வாங்கியாரனுமா?"
"அதெல்லாம் ஒன்னும் வேணாம், இந்தா இத பிடி" என்று ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை பிரபாவின் கையில் திணித்தாள்.
"இல்லமா வேண்டாம், பெரியம்மாவுக்கு தெரிஞ்ச திட்டுவாங்க"
என்று நெளிந்த பிரபாவின் கையை விடாமல் பணத்தை திணித்தபடி
"அதெல்லாம் ஒன்னும் தெரியாது, அப்படி கேட்டாலும் நான் சொல்லிக்கிறேன், நீ காலுக்கு நல்ல மருந்தா வாங்கிப்போடு... " என்றாள்.
சுவேதாவின் பிடிவாதத்தால் பணத்தை வாங்கிக்கொண்ட பிரபா
"சரி நான் கெளம்பறேன் சின்னம்மா" என்று பிரபா நகர முயல
"பிரபா நான் சொன்னத யோசிச்சுப் பாத்தியா?" என்றாள் தலையை குனிந்து கொண்டே.
"சின்னம்மா நான் அன்னைக்கு சொன்னதான் இப்பவும் சொல்றேன், தயவு செஞ்சி புரிஞ்சுக்குங்க. நீங்க பணக்காரங்க நான் ஒரு ஏழ அதுவும் வயசுக்குவந்த தங்கச்சிக்கு ஒரு நல்ல துணி எடுத்துக் குடுக்ககூட வக்கில்லாத ஏழ, உங்களுக்கும் எனக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது. எம்மேல உங்களுக்கு இருக்குறது காதலில்ல கருண, கருணையும் காதலையும் போட்டுக் கொழப்பிக்காதீங்க, அதுவுமில்லாம என்னால உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ண முடியாது. என்ன மன்னிச்சிடுங்க." என்று கையெடுத்து கும்பிட்டபடி திரும்பி நடந்தான் ஏழை பிரபாகரன்.
கலங்கிய கண்களுடன் பிரபாகரனை பார்த்தப்படியே சிலையாய் நின்றாள் சுவேதா.
Labels:
சிறுகதை
Thursday, October 27, 2011
தமிழ் வரலாற்றுப் படங்களுக்கு வரவேற்ப்பு கொடுப்போம் (மீள் பதிவு)
இன்றைய தமிழனின் வாழ்க்கையில் திரைப்படம் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது என்று சொன்னால் மிகையாகாது. அடிப்படையில் தமிழன் கலை ரசனையில் தமிழ் திரைப்படங்கள் அசுர வளர்ச்சி பெற்று விளங்கினாலும் அதனை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்கிறோமா? என்பது ஒரு பெரியக் கேள்விக் குறியாக நிற்கிறது.
அடிப்படைக் கல்வியில் இல்லாத பல விடயங்கள் பாமர மக்களையும் சென்று அடைவதற்கு ஊடகங்களே முதன்மை பங்கு வகிக்கின்றன. அத்தகைய ஊடங்களில் திரைப்படம் முதன்மையாக விளங்குகிறது. வெறும் பொழுது போக்கு அம்சமாகவும் வக்கிரங்களுக்கு தீனிபோடும் மசாலாகவும் மட்டும் இல்லாமல், நல்ல கருத்துக்களையும் வரலாற்று சிறப்புகளையும் எளிதில் மக்களிடம் எடுத்துசெல்லும் ஒரு சிறந்த ஆயுதமாக திரைப்படங்களை பயன்படுத்தலாம்.
மக்களிடம் கருத்துக்களை மிக விரைவில் கொண்டுசெல்ல மிகச் சிறந்த ஒரு ஊடகமாக திரைப்படம் இருக்கும் பொழுது, அதை ஏன் தமிழின வளர்ச்சிக்காக பயன்படுத்தக்கூடாது? என்னும் சிந்தனை எழுந்துகொண்டே இருக்கிறது.
மறைக்கப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட தமிழனின் பெருமை இன்று தமிழர் பலர் அறியமாட்டார். எவன் ஒருவன் தன்னை குறைத்து மதிப்பிடுகிறானோ அவனால் என்றுமே சிறந்து விளங்க இயலாது என்பது உலகம் இதுவரை உணர்த்திய உண்மை. அதற்காக மிகைப்படுத்தி சொல்லப்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால் சொல்லப்படவேண்டிய உண்மைகளுக்கான சான்றுகள் பல நம்மிடம் இன்றும் உள்ளன.
ஒரு குறிப்பிட்ட கூட்டத்தால் அழிக்கப்பட்ட, அழிந்துகொண்டிருக்கிற தமிழனின் பெருமையையும், சிறப்பையும் வெளிக்கொணர்ந்து தமிழன் தன்னை யார் என்று உணர்துகொள்ள, இழந்த பெருமையையும், சிறப்பையும் மீட்டெடுக்க சரியான ஊடகம் இந்த திரைத்துறை என்பது சிறிதும் ஐயமில்லை.
வெறும் ஐநூறு, அறுநூறு ஆண்டுகள் வரலாற்றை கொண்ட நாடுகளே சிறந்த வரலாற்றுப் படங்களை கொடுக்கும் பொழுது, ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் வரலாற்றால் முடியாத என்ன?
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் வெளிவந்த தமிழ் வரலாற்றுப் படமாகிய "ஆயிரத்தில் ஒருவன்" எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும் அந்த முயற்ச்சியை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழனின் தலையாயக் கடமை என்றே நினைக்கிறேன்.
தொழில்நுட்ப குறைகள் இருந்தாலும் முதல் படி சிறப்பாக அமைவது என்பது அனைவருக்கும் அனைத்து விடயத்திலும் இயலாத விடயம். என்னைப்பொறுத்தவரை "ஆயிரத்தில் ஒருவன்" என்னை திருப்திபட வைத்தது என்றே சொல்வேன்.
ஆயிரம் விடயங்கள் குறை சொன்னாலும் அது ஒரு தமிழனால் எடுக்கப்பட்ட தமிழனைப் பற்றிய வரலாற்றை தொட்டு செல்லும் கதை என்பதில் நான் பெருமை அடைகிறேன். என்னதான் சிறந்த கதையம்சங்களும், நடிப்புத் திறமையும் இருந்தாலும் நம்மிடம் தொழில்நுட்ப வசதி மேற்கத்திய நாடுகளை விட குறைவுதான். பிறகு நாம் அவர்களின் படங்களுக்கு இணையாக எடுத்த எடுப்பிலேயே எதிர் பார்ப்பது எந்த வகையில் ஞாயம்?.
இதுபோன்ற முதன்மை முயற்ச்சிகளை ஊக்குவிக்கும் போதே சிறப்பான வளர்ச்சியை நாம் அடைய முடியும் என்பதை அனைவரும் தெரிந்திருக்கும் பொழுது ஊக்குவிக்காமல் இருப்பது என்பது நம் வளர்ச்சிக்கு நாமே முட்டுக்கட்டை போடுவதுபோலாகுமே?.
இருமுறை எடுக்கமுயன்று கைவிடப் பட்ட "பொன்னியின் செல்வன்" கதை இன்றைய அளவிலும் கேள்வியாகவே உள்ளது. காரணம் அத்துனை செலவு செய்து படத்தினை மக்களிடம் வெற்றி பெற வைக்க முடியுமா? என்ற சந்தேகமே முக்கிய காரணம். இங்கு திரைத்துறை வர்த்தகரீதியாகவும் பார்க்கப்பட வேண்டியது என்பது ஒரு முக்கிய கண்ணோட்டமாகும்.
இப்பொழுதும் அதிக எதிர்பார்ப்போடு வரவிருக்கும் "7ம் அறிவு" "கரிகாலன்" போன்ற திரைப்படங்களின் வெற்றியைப் பொறுத்தே எதிர்கால தமிழ் வரலற்று படங்களின் வளர்ச்சி அமையும் என்பது துளியும் ஐய்யமில்லை. அத்தகைய படங்களை அதிகப் படியாக புகழ வேண்டாம் ஆனால் நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.
எந்த ஒரு விடயத்திலும் நாம் நம்மவரை விட்டுக்கொடுக்க வேண்டாம். அதற்காக இல்லாத ஒன்றினை தேவையில்லாமல் உயர்த்தி புகழவும் வேண்டாம் என்பதே எனது தனிப்பட்டக் கருத்து.
பதிவர்களாகிய நாமும் சரி, மக்களும் சரி நமது பெருமை பறைசாற்றும் இதுபோன்ற வரலாற்றுப் படங்கள் வந்தால் நிச்சயம் ஊக்குவிக்க வேண்டியது நமது தலையைக் கடமை என்று எண்ணி செயல்படுவோம்.
அடிப்படைக் கல்வியில் இல்லாத பல விடயங்கள் பாமர மக்களையும் சென்று அடைவதற்கு ஊடகங்களே முதன்மை பங்கு வகிக்கின்றன. அத்தகைய ஊடங்களில் திரைப்படம் முதன்மையாக விளங்குகிறது. வெறும் பொழுது போக்கு அம்சமாகவும் வக்கிரங்களுக்கு தீனிபோடும் மசாலாகவும் மட்டும் இல்லாமல், நல்ல கருத்துக்களையும் வரலாற்று சிறப்புகளையும் எளிதில் மக்களிடம் எடுத்துசெல்லும் ஒரு சிறந்த ஆயுதமாக திரைப்படங்களை பயன்படுத்தலாம்.
மக்களிடம் கருத்துக்களை மிக விரைவில் கொண்டுசெல்ல மிகச் சிறந்த ஒரு ஊடகமாக திரைப்படம் இருக்கும் பொழுது, அதை ஏன் தமிழின வளர்ச்சிக்காக பயன்படுத்தக்கூடாது? என்னும் சிந்தனை எழுந்துகொண்டே இருக்கிறது.
மறைக்கப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட தமிழனின் பெருமை இன்று தமிழர் பலர் அறியமாட்டார். எவன் ஒருவன் தன்னை குறைத்து மதிப்பிடுகிறானோ அவனால் என்றுமே சிறந்து விளங்க இயலாது என்பது உலகம் இதுவரை உணர்த்திய உண்மை. அதற்காக மிகைப்படுத்தி சொல்லப்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால் சொல்லப்படவேண்டிய உண்மைகளுக்கான சான்றுகள் பல நம்மிடம் இன்றும் உள்ளன.
ஒரு குறிப்பிட்ட கூட்டத்தால் அழிக்கப்பட்ட, அழிந்துகொண்டிருக்கிற தமிழனின் பெருமையையும், சிறப்பையும் வெளிக்கொணர்ந்து தமிழன் தன்னை யார் என்று உணர்துகொள்ள, இழந்த பெருமையையும், சிறப்பையும் மீட்டெடுக்க சரியான ஊடகம் இந்த திரைத்துறை என்பது சிறிதும் ஐயமில்லை.
வெறும் ஐநூறு, அறுநூறு ஆண்டுகள் வரலாற்றை கொண்ட நாடுகளே சிறந்த வரலாற்றுப் படங்களை கொடுக்கும் பொழுது, ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் வரலாற்றால் முடியாத என்ன?
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் வெளிவந்த தமிழ் வரலாற்றுப் படமாகிய "ஆயிரத்தில் ஒருவன்" எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும் அந்த முயற்ச்சியை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழனின் தலையாயக் கடமை என்றே நினைக்கிறேன்.
தொழில்நுட்ப குறைகள் இருந்தாலும் முதல் படி சிறப்பாக அமைவது என்பது அனைவருக்கும் அனைத்து விடயத்திலும் இயலாத விடயம். என்னைப்பொறுத்தவரை "ஆயிரத்தில் ஒருவன்" என்னை திருப்திபட வைத்தது என்றே சொல்வேன்.
ஆயிரம் விடயங்கள் குறை சொன்னாலும் அது ஒரு தமிழனால் எடுக்கப்பட்ட தமிழனைப் பற்றிய வரலாற்றை தொட்டு செல்லும் கதை என்பதில் நான் பெருமை அடைகிறேன். என்னதான் சிறந்த கதையம்சங்களும், நடிப்புத் திறமையும் இருந்தாலும் நம்மிடம் தொழில்நுட்ப வசதி மேற்கத்திய நாடுகளை விட குறைவுதான். பிறகு நாம் அவர்களின் படங்களுக்கு இணையாக எடுத்த எடுப்பிலேயே எதிர் பார்ப்பது எந்த வகையில் ஞாயம்?.
இதுபோன்ற முதன்மை முயற்ச்சிகளை ஊக்குவிக்கும் போதே சிறப்பான வளர்ச்சியை நாம் அடைய முடியும் என்பதை அனைவரும் தெரிந்திருக்கும் பொழுது ஊக்குவிக்காமல் இருப்பது என்பது நம் வளர்ச்சிக்கு நாமே முட்டுக்கட்டை போடுவதுபோலாகுமே?.
இருமுறை எடுக்கமுயன்று கைவிடப் பட்ட "பொன்னியின் செல்வன்" கதை இன்றைய அளவிலும் கேள்வியாகவே உள்ளது. காரணம் அத்துனை செலவு செய்து படத்தினை மக்களிடம் வெற்றி பெற வைக்க முடியுமா? என்ற சந்தேகமே முக்கிய காரணம். இங்கு திரைத்துறை வர்த்தகரீதியாகவும் பார்க்கப்பட வேண்டியது என்பது ஒரு முக்கிய கண்ணோட்டமாகும்.
இப்பொழுதும் அதிக எதிர்பார்ப்போடு வரவிருக்கும் "7ம் அறிவு" "கரிகாலன்" போன்ற திரைப்படங்களின் வெற்றியைப் பொறுத்தே எதிர்கால தமிழ் வரலற்று படங்களின் வளர்ச்சி அமையும் என்பது துளியும் ஐய்யமில்லை. அத்தகைய படங்களை அதிகப் படியாக புகழ வேண்டாம் ஆனால் நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.
எந்த ஒரு விடயத்திலும் நாம் நம்மவரை விட்டுக்கொடுக்க வேண்டாம். அதற்காக இல்லாத ஒன்றினை தேவையில்லாமல் உயர்த்தி புகழவும் வேண்டாம் என்பதே எனது தனிப்பட்டக் கருத்து.
பதிவர்களாகிய நாமும் சரி, மக்களும் சரி நமது பெருமை பறைசாற்றும் இதுபோன்ற வரலாற்றுப் படங்கள் வந்தால் நிச்சயம் ஊக்குவிக்க வேண்டியது நமது தலையைக் கடமை என்று எண்ணி செயல்படுவோம்.
Labels:
கட்டுரை
Wednesday, October 26, 2011
தமிழா....! உணர்வுகொள்....! ஒன்றுபடு.....!
வாழ்ந்து, வளர்ந்து, ஆண்ட ஒரு இனம் இன்னும் அடிமைப் பட்டுக்கிடப்பதேன்? சாதி, மதம், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் இன்னும் எப்படியெல்லாம் சிதைந்துபோக காத்திருக்கிறாய் தமிழா?
தன்மானம் என்பதை உயிர்மூச்சை கொண்டவன், வீரத்தில் சிறந்தவன், பண்பிலே திகழ்ந்தவன், கலைகளில் வித்தகன், அரசியலில் ஆழ்ந்தவன், உழைப்பில் உயந்தவன் என்று இன்னும் எத்தனை எத்தனை பெருமைகளை இழக்கப் போகிறாய் தமிழா?
சேர, சோழ, பாண்டிய, பல்லவனாய் இருந்தபோது ஒற்றுமை இல்லை ஆனால் உலகில் சிறந்து விளங்கினாய், இன்று சோழ, சேர, பாண்டிய, பல்லவ நாடு இல்லை, ஒற்றுமையும் இல்லை, சிறப்பும் இல்லை ஏன்? தனியாய் இருந்தபோது இருந்த தன்மை ஒன்றாய் ஆகியதும் சிறந்திருக்க வேண்டும் அல்லவா? அது இன்று இல்லையே ஏன்? ஒரு வேலை தமிழனுக்கு தமிழனே எதிரியாய் இருந்தால்தான் உன்னால் வீரம் காண முடியுமோ? இல்லை உன்னை யாரென்று நீ உணர முடியுமோ?
தன்மானம் இழந்து, நமது உரிமையை காக்க, நமது இனத்தை காக்க எவன் எவனையெல்லாம் நம்பிக் கிடக்கப் போகிறாய், கண்டவனிடம் கையேந்தும் நிலைமை ஏன்? சிந்திப்பாயா தமிழா?
பல்லவன் முதல், பிரபாகரன் வரை யாரும் நாடு பிடிக்கும் ஆசையில் போர் தொடங்க வில்லை, தமிழனுக்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்பட்டத்தோ அங்குதான் படைஎடுத்தான் பாடம் புகட்டினான். ஆங்கிலேயன் போல் தமிழன் கொள்ளையடிக்க ஆசைப் பட்டிருந்தால் இன்று உலகப் பொதுமொழி ஆங்கிலமாய் இருந்திருக்காது, தமிழாய்த்தான் இருந்திருக்கும்.
தன்னம்பிக்கை இல்லையா? தன்மானம் இல்லையா? இன்று ஈழத்தை அழித்தவன் நாளை தமிழகத்தை அழிக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்? குடிக்க தண்ணீர் தராதவன், நிம்மதியாய் வாழ வழி செய்யாதவன், சொந்த நாட்டு மக்களின் கோரிக்கையை உதாசீனப் படுத்துபவனிடம் இன்னும் எத்தனை எத்தனை நாள் அடிமையாய் இருக்கப் போகிறாய்? தமிழ்நாடு தனிமைபட்டுவிடுமோ என்றுதான் நினைத்து ஈழம் அழித்தானோ? இல்லை தமிழன் தன்மானத்தை தொலைத்துவிட்டான் என்று நம்பி அழித்தொழித்தனோ? முற்றிலுமாய் சிதைத்துவிட்டான் என்பதுமட்டும் உண்மை, நம் சொந்தங்கள் அழிந்துவிட்டன என்பது உண்மையிலும் உண்மை.
கதறினோம் கூப்பாடு போட்டோம், எழுதினோம், போராடினோம் இப்பொழுது தீபாவளி கொண்டாடுகிறோம், திரையரங்கில் பொழுதை கழிக்கிறோம். எந்த தைரியத்தில் நமக்கு இந்த அலச்சியம்? பெரிய தேசத்துடன் அண்டிப் பிழைக்கிறோம் என்றா? இல்லை நமக்கு எதுவும் நடக்காது என்றா?
இந்தியாவில் இரண்டு அணுஉலைகளை கொண்ட ஒரே மாநிலம்,
மூன்று முக்கிய நதிகளில் தண்ணீருக்காக மூன்று மாநிலத்திடம் பிச்சை எடுக்கும் மாநிலம்
சொந்த பகுதியில் குடிநீர்த் திட்டம் தொடங்க அடுத்த மாநிலத்தவன் செய்யும் பிரச்னைக்கு பயந்து திட்டத்தை கைவிட்ட மாநிலம்
சொந்த நாட்டு மீனவர்களின் சாவின் எண்ணிக்கையை உக்காந்து எண்ணிக் கொண்டிருக்கும் மாநிலம்
ஆகா எத்தனை எத்தனை பெருமை உலகின் தலைசிறந்த இந்த தமிழனுக்கு?
நாம் இறந்தாலும் தமிழ் நாட்டில் நம் இனம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் ஒரு ஈழத்தமிழனாவது, மகிழ்ச்சியாய் உயிரை விட்டிருப்பான், இங்கு அவ்வாறு நடந்தால் நாம் யாரை நினைத்து மகிழப் போகிறோம்? புலம் பெயர்ந்த தமிழர்களை நினைத்தா?
தமிழா இதற்குமேலும் நீ சிந்திக்காவிடில், லெமூரிய கண்டம் போல் ஆகிவிடும் தமிழ்நாடு, தமிழினம் என்று ஒன்று இருந்தது என்பது கல்வெட்டுகளில் மட்டும் இடம்பெறும்.
உணர்ந்துகொள், விழித்தெழு, மாயைகளை உடைத்தெறி, வீறுகொள், ஒற்றுமையாய் இரு, அடிமையாய் இராதே, தமிழனை விட்டுக் கொடுக்காதே, இலவசங்களில் மயங்காதே, சாதிமத பேதம் தவிர், சென்னை முதல் ஈழம் வரை ஒரே இனம், ஒரே மக்கள் என்னும் எண்ணம் கொள், புல்லுருவிகளை அடையலாம் காண், களைகளை பிடிங்கி எறி, நாம் யாரையும் அழிக்க வேண்டாம், ஆனால் நம்மை நாமே கத்துக் கொள்வோம், பிறரிடம் கையேந்த வேண்டாம். தன்மானம் தழைத்தோங்கட்டும்.
தன்மானம் என்பதை உயிர்மூச்சை கொண்டவன், வீரத்தில் சிறந்தவன், பண்பிலே திகழ்ந்தவன், கலைகளில் வித்தகன், அரசியலில் ஆழ்ந்தவன், உழைப்பில் உயந்தவன் என்று இன்னும் எத்தனை எத்தனை பெருமைகளை இழக்கப் போகிறாய் தமிழா?
சேர, சோழ, பாண்டிய, பல்லவனாய் இருந்தபோது ஒற்றுமை இல்லை ஆனால் உலகில் சிறந்து விளங்கினாய், இன்று சோழ, சேர, பாண்டிய, பல்லவ நாடு இல்லை, ஒற்றுமையும் இல்லை, சிறப்பும் இல்லை ஏன்? தனியாய் இருந்தபோது இருந்த தன்மை ஒன்றாய் ஆகியதும் சிறந்திருக்க வேண்டும் அல்லவா? அது இன்று இல்லையே ஏன்? ஒரு வேலை தமிழனுக்கு தமிழனே எதிரியாய் இருந்தால்தான் உன்னால் வீரம் காண முடியுமோ? இல்லை உன்னை யாரென்று நீ உணர முடியுமோ?
தன்மானம் இழந்து, நமது உரிமையை காக்க, நமது இனத்தை காக்க எவன் எவனையெல்லாம் நம்பிக் கிடக்கப் போகிறாய், கண்டவனிடம் கையேந்தும் நிலைமை ஏன்? சிந்திப்பாயா தமிழா?
பல்லவன் முதல், பிரபாகரன் வரை யாரும் நாடு பிடிக்கும் ஆசையில் போர் தொடங்க வில்லை, தமிழனுக்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்பட்டத்தோ அங்குதான் படைஎடுத்தான் பாடம் புகட்டினான். ஆங்கிலேயன் போல் தமிழன் கொள்ளையடிக்க ஆசைப் பட்டிருந்தால் இன்று உலகப் பொதுமொழி ஆங்கிலமாய் இருந்திருக்காது, தமிழாய்த்தான் இருந்திருக்கும்.
தன்னம்பிக்கை இல்லையா? தன்மானம் இல்லையா? இன்று ஈழத்தை அழித்தவன் நாளை தமிழகத்தை அழிக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்? குடிக்க தண்ணீர் தராதவன், நிம்மதியாய் வாழ வழி செய்யாதவன், சொந்த நாட்டு மக்களின் கோரிக்கையை உதாசீனப் படுத்துபவனிடம் இன்னும் எத்தனை எத்தனை நாள் அடிமையாய் இருக்கப் போகிறாய்? தமிழ்நாடு தனிமைபட்டுவிடுமோ என்றுதான் நினைத்து ஈழம் அழித்தானோ? இல்லை தமிழன் தன்மானத்தை தொலைத்துவிட்டான் என்று நம்பி அழித்தொழித்தனோ? முற்றிலுமாய் சிதைத்துவிட்டான் என்பதுமட்டும் உண்மை, நம் சொந்தங்கள் அழிந்துவிட்டன என்பது உண்மையிலும் உண்மை.
கதறினோம் கூப்பாடு போட்டோம், எழுதினோம், போராடினோம் இப்பொழுது தீபாவளி கொண்டாடுகிறோம், திரையரங்கில் பொழுதை கழிக்கிறோம். எந்த தைரியத்தில் நமக்கு இந்த அலச்சியம்? பெரிய தேசத்துடன் அண்டிப் பிழைக்கிறோம் என்றா? இல்லை நமக்கு எதுவும் நடக்காது என்றா?
இந்தியாவில் இரண்டு அணுஉலைகளை கொண்ட ஒரே மாநிலம்,
மூன்று முக்கிய நதிகளில் தண்ணீருக்காக மூன்று மாநிலத்திடம் பிச்சை எடுக்கும் மாநிலம்
சொந்த பகுதியில் குடிநீர்த் திட்டம் தொடங்க அடுத்த மாநிலத்தவன் செய்யும் பிரச்னைக்கு பயந்து திட்டத்தை கைவிட்ட மாநிலம்
சொந்த நாட்டு மீனவர்களின் சாவின் எண்ணிக்கையை உக்காந்து எண்ணிக் கொண்டிருக்கும் மாநிலம்
ஆகா எத்தனை எத்தனை பெருமை உலகின் தலைசிறந்த இந்த தமிழனுக்கு?
நாம் இறந்தாலும் தமிழ் நாட்டில் நம் இனம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் ஒரு ஈழத்தமிழனாவது, மகிழ்ச்சியாய் உயிரை விட்டிருப்பான், இங்கு அவ்வாறு நடந்தால் நாம் யாரை நினைத்து மகிழப் போகிறோம்? புலம் பெயர்ந்த தமிழர்களை நினைத்தா?
தமிழா இதற்குமேலும் நீ சிந்திக்காவிடில், லெமூரிய கண்டம் போல் ஆகிவிடும் தமிழ்நாடு, தமிழினம் என்று ஒன்று இருந்தது என்பது கல்வெட்டுகளில் மட்டும் இடம்பெறும்.
உணர்ந்துகொள், விழித்தெழு, மாயைகளை உடைத்தெறி, வீறுகொள், ஒற்றுமையாய் இரு, அடிமையாய் இராதே, தமிழனை விட்டுக் கொடுக்காதே, இலவசங்களில் மயங்காதே, சாதிமத பேதம் தவிர், சென்னை முதல் ஈழம் வரை ஒரே இனம், ஒரே மக்கள் என்னும் எண்ணம் கொள், புல்லுருவிகளை அடையலாம் காண், களைகளை பிடிங்கி எறி, நாம் யாரையும் அழிக்க வேண்டாம், ஆனால் நம்மை நாமே கத்துக் கொள்வோம், பிறரிடம் கையேந்த வேண்டாம். தன்மானம் தழைத்தோங்கட்டும்.
Labels:
கட்டுரை
Subscribe to:
Posts (Atom)