Saturday, October 2, 2010

கிரகணம்...

எனக்குப் பின்னல் இருந்து கொண்டு
உன்னுள் நான் என்கிறாய்
விலகும் போதுதான் தெரிகிறது
உன்னால்தான் நான் என்று

உன்னுடன் இருக்கும் பொழுதான்
நான் ஒளிர்வதாய் உணர்கிறேன்
என்னை விட்டு நீ விலகினால்
சிறிது சிறுதாய் சிதறுகிறேன்

உன்னோடு நான் உறவாட
விண்ணோடு கண்களை
நம்மோடு உலவவிட்டால்
அந்தோ பரிதாபம்
அவர்களின் பார்வை தான்

Friday, October 1, 2010

உயிரம்புகள்...

ஒவ்வொரு முறையும் தாக்கப்படுகிறேன்

மிகமிகச் சரியாக மிகத்துல்லியமாக

தாக்கப்படும் ஒவ்வொருமுறையும்

வீழ்ச்சி காண்கிறேன் ரம்மியமாக

தாக்கிய அம்புகுவியல் மேல் நின்று

எண்ண முயல்கிறேன் அம்புகளை அல்ல

வீழ்ச்சிகளை மட்டும் தான்

சில அம்புகள் நீளமானவை

சில அம்புகள் அகலமானவை

சில கூரானவை, பல நேரானவை

மழுங்கியது சில, ஒடிந்தது சில

குருதிக்கரையுடன் சில அம்புகள்

பலரை தாக்கிய அடையாளம் தாங்கி

இவையணைத்தும் என்னைத் தாக்கிய

உயிரம்புகள்...............

Wednesday, September 29, 2010

காகிதம்

வெண்மையாய் இருந்த வெற்றுக் காகிதம்

ஆணிகளால் அரையப் பட்டிருந்தாலும்

அமைதி காத்தது அழகாகவே

தூரிகை துவலத்துவல நிறமேறியது

பச்சை வர்ணம் பளிச்சிட்டது

சிவப்பு வர்ணம் ஆங்காங்கே சிதறியது

நீல வர்ணம் நீண்டது

மஞ்சள் வர்ணம் மருகியது

கருப்பு வர்ணம் கனமின்றி பெருகியது

அங்கும் இங்கும் வர்ணக்கலவை

பெயரிட இயலா புதுப்புது வர்ணம்

காகிதத்தை காதலன் போல்

தொட்டு முடித்தது தூரிகை

அழகாய்த்தான் இருந்தது ஓவியம்

தனித்தன்மை இழந்தது காகிதம்

Monday, September 27, 2010

நிரந்தரமாய்.......................

தொலைந்து போன நித்திரை
எங்கோ தொலைந்துபோன என் நித்திரை
வலியவந்த வலிகளினால்
கலைந்துபோன நித்திரை
உழைப்புக்காகக் கலைத்தேன்
ஊருக்காகக் கலைத்தேன்
உறவுக்காகக் கலைத்தேன்
எங்கோ அதனை தொலைத்தேன்
கண்டடையும் முன்பு காலம் வந்தது
நித்திரை ஏற்க்க நிரந்தரமாய்

-------------------------------------------------------------
அவள் தான்
அவளே தான்

நினைவைப் பறித்துவிட்டு
நிதர்சமாய் சிரிக்கிறாள்
உணர்வை விதைத்தவள்
அறுவடைக்கு மறுக்கிறாள்

என்று அடிமை நான்
அவளின் அணைப்பிற்கு
இன்றும் குழந்தை நான்
அவளின் கரத்திற்கு

என்னைத் தாலாட்டி
பாராட்டி
சீராட்டி அமுதூட்டும் அன்னை
என் அன்னை
அவள் என் தமிழன்னை

Sunday, September 5, 2010

எங்கோ...........

கனவுகள்

ஆசைகள்

லட்சியம்

கொள்கை

பாசம்

நட்பு

வேட்க்கை

காதல்

கருணை

அன்பு

இவற்றோடு

எரியும்

மனிதனின் படம்

செய்தித்தாளில்

எங்கோ

குண்டு வெடிப்பாம்